சித்தார் கோட்டை - ஓர் ஆய்வுக்கோவை

சி.அ.அ.முஹம்மது அபுத்தாஹிர்
முன்னாள் இரங்கூன் 'ஜோதி'வார இதழ்(1954)முதன்மை ஆசிரியர், பாத்திமா (ரலி) புகழ்மணிமாலை ஆசிரியர்

வாசகர்களின் கருத்துக்கள்

Refer this Page to your friends

இன்றைய தலைமுறையினர்கள்,  ஏன் முந்தைய தலைமுறையினர்கள் பலர் அறியாத பல வரலாற்றுச் சம்பவங்களையும், செய்திகளையும் நமதூர் பெரியார் - ஆசிரியர் சி. அ. அ. முஹம்மது அபுத்தாஹிர் அவர்கள் சுவைபட எழுதியுள்ளார்கள். தான் அறிந்த இந்த சம்பவங்களை உலகத்தினர் அறியட்டும் என்ற நன்நோக்கில் சித்தார்கோட்டை.காமில் வெளியிட முன்வந்துள்ளார்கள்.

உண்மையில் சிரமமான இந்த ஆய்வு பாராட்டத்தக்கதாகும். இந்த அறிய சேவைக்காக நாம் அனைவரும் அவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த ஆய்வுக்கட்டுரை சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெற எங்களுக்கு எழுதுங்கள். தகுந்த ஆதாரத்துடன் தரப்படும் நல்ல கருத்துக்கள் இந்த ஆய்வுக் கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும்.

எங்களுக்கு எழுத..  Mail US

M.S. காஜா முயீனுத்தீன், கப்ஜி - சவுதி அரேபியா


டாக்டர் ஹிமானாவின் அறிமுகம்

நமது முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் வெள்ளிவிழாவினை சிறப்பாகக் கொண்டாட முடிவு மேற்கொண்டபோது, அதன் தொடர்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. நான் அம்மலர்க்குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். அம்மலரில் சித்தார் கோட்டையின் வரலாறு முடிந்தவரை சுருக்கமாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு, வெளிவந்தது.
 
அப்பணியினை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள் யார் என்று பரிசீலித்து இப்போது சித்தார்கோட்டை.காம் தளத்தில் இந்த ஆய்வுக்கோவையை எழுதும் ஆசிரியர் அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியைச் செய்து முடித்து மலர்க்குழுவிடம் ஒப்படைத்தார்கள். மலர்க்குழுவுடன் பள்ளி - ஜமாஅத் நிர்வாகக் குழுக்களும், ஊரின் அப்போதைய மூத்த வயதுப் பெரியார்கள் அனைவரும் அமர்ந்து பரிசீலனைக்குப்பின் அவ்வாய்வின் ஒரு பகுதி மட்டும் மலரில் இடம் பெறச் செய்யப்பட்டது. மலரில் இடம் போதாமையே சுருக்கமாக வெளியிடக் காரணம்.
 
அந்த ஆய்வு இப்போது முழுமையாக நமது தளத்தில் வெளிவரும் செய்தியை சகோதரர் ஹாஜா மொய்னுதீன் அவர்கள் தெரிவித்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அது நம்மூர் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய வரலாறு.
 
இதனை எழுதியிருக்கும் பெரியார் சி.அ.அ. முஹம்மது அபூதாஹிர் அவர்கள் என் ஆசிரியர். அரபி, உர்தூ, இந்தி, தமிழ், ஆங்கிலம், பர்மீஸ் இப்படி பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரிந்த அறிஞர்.
 
சித்தார்கோட்டையில் பிறந்து பல துறைகளிலும் திறமை பெற்றிருந்த அறிஞர் பெருமக்கள் வரிசையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துவரும் அன்னாருக்கு நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம்.
 
இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட அன்னாருக்கு நம் நன்றி.
 
டாக்டர் ஹிமானா சையத்,
சிங்கப்பூர் - 14 ஆகஸ்ட் 2009

ஆய்வுக்கட்டுரைகளின் பொருளடக்கம்

 


தொடரும்..

Refer this Page to your friends