بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றானா ?

அல்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் அல்லாஹூத்தஆலா தனது அர்ஷ் எனும் பீடத்தில் நிலைபெற்றிருப்பதாகவும் தன் படைப்பினரின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்த வண்ணம் இருப்பதாகவும் கூறியிருப்பதைக் காணக் கூடியதாயிருக்கின்றது .

றஹ்மானான அல்லாஹ் அர்ஸிலே நிலை கொண்டிருக்கின்றான். (ஸூரா தாஹா 5ம் வசனம்)
இதுபற்றி மேலும் விளக்கமாக அன்ஆம் 18,முல்க் 16, பாதிர் 10,மஆரிஜ் 4, ஆல இம்ரான் 55,நஹ்ல் 102, ஸஜதா5, போன்ற இன்னும் பல வசனங்களில் தெளிவு படுத்தியுள்ளான். இதன் விதம் முறைமையைப் பொறுத்த வரை படைப்புக்களின் கற்பனைக்கு மாற்றமாகவே இருக்கும் எனவும் நாம் அறிய முடிகின்றது. நபியவர்கள் அல்லாஹ் மேலே அர்ஷிலே நிலை பெற்றிருக்கின்றான் என்பதை பல்வேறு நபிமொழிகளில் தெளிவு படுத்தியிருக்கி;றார்கள் 'வானத்திலுள்ளவனே நம்பிய என்னை நீங்கள் நம்ப மாட்டீர்களா? என சிலரிடம் வினவியுள்ளார்கள்; .( புகாரி ப:4004)


ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கிருக்கின்றான் என்று நபியவர்கள் கேட்க அவள் வானத்தில் (மேலே) என பதிலளிக்க இவள் முஃமின் இவளை விடுதலை செய்யுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 836)


அனைத்து ஸஹாபாத்தோழர்களும் இந்த விடயத்தில் இவ்வாறே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கின்றான் எனும் இந்துக்களின் கொள்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட மாத்துர்தியா, அஷ்அரிய்யா போன்றோரின் கொள்கையினையே கொண்டிருக்கின்றனர் என்பதை அறியும் போது தான் வேதனையாக இருக்கின்றது. இந்துக்கள் தான் கடவுள் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் எனும் வழிகெட்ட கொள்கைக்குரியவர்கள் அவர்கள் காபிர்களாதலால் இக்கொள்கையைச் சொல்வது ஆச்சரியமல்ல ஆனால் தப்லீக் பெரியார்கள் ??

திக்ரின் சிறப்புப் பற்றி ஜக்கரிய்யா மௌலானா கூறும் போது 'அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான். அவனது ஒளி உலகையே வியாபித்திருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு திக்ர் செய்ய வேண்டும்' என்கின்றர்கள். ( ஸக்காலத்துல6; குலூப் 144)

தப்லீக் சகோதரர்களே ! நாம் அனைவரும் நேர்வழியை அடைய வேண்டுமெனும் நோக்கில்தானே இவ்வளவு சிரமப்பட்டு தியாகத்துக்கு மத்தியில் வெயில் மழையைப் பொருட்படுத்தாது பாடு படுகின்றோம். எதற்காக ? எம்மால் ஒருவன் நேர்வழி பெற்று விட்டால் அதன் அளப்பரிய நன்மை முழுக்க எமக்குக் கிடைக்கும் எனும் ஆசையால் தானே ! அப்படியாயின் நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் நூற்றுக்கு நூறு நபிவழியில் உள்ளதுதானா? என்று பார்க்க வேண்டும் தானே ! இல்லா விட்டால் நாம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாம் என்று சொல்லிக் கொடுத்து விட்டால் , அதன் படி அவன் அமல் செய்தால் அதனால் கிடைக்கும் குற்றத்திலும் எமக்குப் பங்கு ண்டுதானே ! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படி நடந்து விட்டால் எமது நிலை என்ன ? குளிக்கப் போய் சேறு பூசியதாகவல்லவா ஆகி விடும் ? எனவே நீங்களும் பெரியார்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் கூறுகின்றேன். உண்மை சற்று கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் புரிந்து விட்டால் அதுவே கரும்பாகி விடும். எனவே பொறுமையுடன் வாசியுங்கள் .


பெரியார்களின் நபி வழிக்கெதிரான செயல்கள், கருத்துக்கள்

'தப்லீக் ஜமாஅத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்று ஒரு புத்தகமுண்டு. ஜக்கரிய்யா மொலானா தனது கைப்பட எழுதியது. அதில் தேவ்பந்த் ஆலிம்கள் பெரியார்களின் ஏகோபித்த கொள்கைகள் பற்றி அவரது ஷேக் மௌலானா மதனீ எழுதியதைப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார் .

1- தேவ்பந்து பெரியார்கள் உஸூல், புரூஉ ஆகிய அனைத்து விடயங்களிலும் இமாம் அபூஹனீபாவைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று சொல்பவர்களுமாவார்கள் இவர்கள் வஹ்ஹாபிகளுக்கு எதிரானவவர்கள். வஹாபிகள் தம்மை ஹம்பலி மத்ஹபு எனக் கூறிக் கொண்டாலும் அதன் சட்டங்களிலொன்றை ஹதீஸூக்கு மாற்றமெனக் கருதினால் அதனை விட்டு விடுவார்கள் .ஆனால் நாங்கள் ஹனபி மத்ஹபைப் பின் பற்றுவது கட்டாயக் கடமை என்பவர்கள் .

2- தேவ்பந் பெரியார்கள் நபியவர்கள் தமது கப்ரில் இவ்வுலகில் இருந்தது போலவே ஹயாத்தாக இருக்கின்றார்கள் .உலகில் ஒருவர் தனிமையிலிருந்து தியானம் செய்வது போல் நபியவர்கள் தனிமையில் இருக்கின்றார்கள் எனும் கருத்தையுடையவர்கள்.

3- நபியவர்களின் சிறப்புகள் அனைத்தும் நிரந்தரமானவை. உலகில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருப்பவை இனி ஏற்படுபவை அனைத்தும் அவர்களது பொருட்டாலேயே ஏற்படுகின்றன அவர்களே எல்லாவற்றுக்கும் அசல் - சூரியனைப் போன்றவர்கள் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பதே தேவ்பந் உலமாக்களின் முடிவான சொல்லாகும்.

4-தஸவ்வுப் - மெஞ்ஞானம் மிகவும் பலன் மிக்கது. ஷேக்கிடம் பைஅத் செய்து கொள்வது மார்க்க முன்னேற்றத்துக்குக் காரணமாக ஆகும் .

5- நபியவர்களுக்கு மார்க்க அறிவு மாத்திரமின்றி இறைவனைப் பற்றிய எல்லா அறிவும் , மற்ற வகையான எல்லா அறிவுகளும் இருந்தன. முன்னோர் பின்னோர் அனைவரின் அறிவும் அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்குச் சமனான அறிவுள்ள எவரும் பிறக்கவுமில்லை பிறக்கப் போவதுமில்லை.

6-தலாயிலுல் கைராத், புர்தா ஷரீப் போன்றவற்றை ஓதுவதும் அதிகம் பலனளிப்பதாகும். தேவ்பந் பெரியார்கள் இவற்றில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளதோடு புர்தா போல் தாமே இயற்றியுமுள்ளனர் நபியவர்களின் பிறப்பு (மீலாதுன்நபி) மட்டுமல்ல அவர்களைப் பற்றி எதைப் பேசினாலும் அதனால் நன்மையும் பரக்கத்தும் உண்டாகும். . (தப்லீக்- கு - பதில்கள் 180)

இவையனைத்தும் தேவ்பந் உலமாக்களின் கொள்கையென ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறியவைகள். இவற்றிலுள்ள மார்க்க முறணான விடயங்களை நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள். விளக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன் .

பாமர மக்களுக்கு தப்லீக் அமைப்பின் மீதும் அதன் பெரியார்கள் மீதும் அளவு கடந்த பற்றும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்திலோ என்னவோ இந்தப் பெரியார்களில் சிலர் தம்மைப் பற்றியோ ,பிற சகபெரியார்களைப் பற்றியோ சில எல்லை மீறிய பேச்சுக்களையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவ வதில்லை. அதிலே இருக்கும் மார்க்க விரோத விடயங்களைக் கண்டு கொள்வதில்லையோ அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுகின்றார்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம் .

முஹம்மதுர் றஸூலுல்லாஹ் - நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்ற கலிமாவை நாம் மொழிந்து இஸ்லாமாகியிருக்கின்றோம். தப்லீக் சகோதரர்களும் கலிமாவுடைய வாழ்க்கை வர வேண்டும் என்பதற்காகவே தாமும் பாடுபடுவதாக வாதிடுகின்றனர். அப்படியானால் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்களை ஏற்று அவர்களை வாழ்க்கை வழி காட்டியாக்கி அவர்கள் ஏவியதை எடுத்து நடக்க வேண்டும். தடுத்தவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நபியவர்களை அன்புவைத்தவர்களாகவும் அவர்கள் வழி நடந்தவர்களாகவும் ஆக முடியும். இதில் தப்லீக் சகோதரர்களுக்கென்ன ? எந்த முஸ்லிமுக்கும் மாற்றக் கருத்துக் கிடையாது. மாற்றுக் கருத்துடையவர் முஸ்லிமாக இருக்கவும் முடியாது .இதனை மனதில் பதித்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் .

1- ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் ..
'எனக்கேற்பட்ட கைசேதமே அந்தோ பரிதாபம் , உங்கள் மீது சத்தியமாகச் சொல்கின்றேன் எனக்கு விரக்தியாக இருக்கின்றது.
என்னை விட்டு விடுங்கள் நான் அப்படியே பாலை வனம் செல்ல விரும்புகின்றேன் .( அகாபிர் கே ஸூலூக் வ இஹ்ஸான். ப: 230)

பாலை வனத்துக்கென்ன ? அசோக வனத்துக்கு வேண்டுமானாலும் போய்வரட்டும். ஆனால் 'உங்கள் மீது சத்தியமாக' என்ற வார்த்தையைக் கவனியுங்கள். சத்தியம் செய்வதாயின் அல்லாஹ்வின் மீது மாத்திரம் செய்யுங்கள் ,அல்லது வாய் மூடியிருங்கள் என்று நபியவர்கள் கூறியிருக்க நபிவழியின் பக்கம் அழைப்பதாகக் கூறும் ஷேக்குல் ஹதீஸ் - ஹதீஸ்கலை மேதைகளே இப்படிச் சொன்னால் .... பிறகு பாமர தப்லீக் சகோதரர்களின் நிலை என்னவோ ?

2- ஜக்கரிய்யா மௌலானா இயம்புகின்றார்கள்...
இப்ராஹீம் இப்னு அத்ஹம் எனும் ஸூபி மகான் ஒரு தடவை இஷாத்தொழுகையை முடித்து விட்டு போர்வையால் போர்த்திக் கொண்டு ஒருக்கணித்துத் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் எழுந்து உளுச் செய்யாமலேயே ஸூபஹூத் தொழுகையை நிறைவேற்றினார்கள் .நீங்கள் உளுச் செய்யவில்லையே என அன்னாரிடம் கேட்கப்பட்டபோது நானெங்கே தூங்கினேன் ? இரவு முழுக்க சொர்க்கத்துப் பூங்காக்களுக்கிடையிலும் நரகத்தின் ஓடைகளுக்கிடையேயுமல்லவா சதா சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்கள் .(திஸ்திய்யா ஷேக்மார் வரலாறு 162)

நபி (ஸல்) அவர்கள் பற்றி தப்லீக்கில்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தினர் அனைவருக்கும் தூதராகவும் வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் இறுதி நபி அவர்களுக்குப்பின் நபிமாரின் வருகை முற்றுப் பெற்று விட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவார்கள். நபியர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி எனும் இறைகட்டளைகளைப் பெற்று அதனை மக்களுக்குச் சொல்வதற்குப் பணிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் அரிதாக சில சட்டதிட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளியுள்ளான் .இது தவிர்ந்த ஏனைய விடயங்களில் அவர்களும் எம் போன்ற மனிதரே... அன்றாட மனிதனுக்கு ஏற்படக் கூடிய பசிதாகம் , ஊன் உறக்கம் .நோய்நொடிகள், கோபம் மகிழ்ச்சி , பிறப்பு இறப்பு போன்ற அனைத்து விடயங்களிலும் அவர்கள் எம்மைப் போன்ற மனிதரே .

இது பற்றி அல்குர்ஆனில்.....
'நபியே நிச்சயமாக நானும் உங்களைப்போன்ற மனிதனே , எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது. (நான் இறைவனல்ல) உங்களின் இறைவன் ஒருவனே என்று நபியே நீங்கள் கூறுங்கள்'. (ஸூரத்துல் கஹ்பு110 ம் வசனம்)

இவ்வாரே உலக விடயங்களில் நான் உங்க ளைப்போன்றவன்தான் என்று நபியவர்கள் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள். ஆனால் நபியவர்களைப்பற்றி தப்லீக் பெரியார்களின் நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துவதற்காக அவர்களால் கைப்பட எழுதப்பட்ட சில நூல்களிலிருந்தே ஒரு சில தகவல்களைத் தருகின்றேன். அசந்து போய் விடாதீர்கள். ஆச்சரியப் படாதீர்கள். படித்து விட்டு உண்மைதானா என ஆராய்ந்தும் பார்த்ததன் பின் அல்லாஹ்வுக்குப் பயந்து சரியானதொரு முடிவை தப்லீக் சகோதரர்கள் எடுக்க வேண்டும் .


1- பெரியார்களை தரிசிக்க வரும் நபி (ஸல்) அவர்கள் .
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள்...
எனது மாமிக்கு மரண வேளை நெருங்கிய போது அவர்கள் 'என்னைத்தூக்கி இருத்துங்கள் இதோ நபியவர்கள் என்னிடம் வந்திருக்கின்றார்கள்' என்றார்கள். அதன் பின் அவர்களது இன்னுயிர் பிரிந்தது. எனது பாட்டனார் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் மரணித்த போது அவர்களின் மரண ஊர்வலத்தின் அளவே மூன்று மைல் தூரம் நீளமாயிருந்தது. அவர்களில் கஸ்புடைய ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவரும் இருந்தார். அவர் ஷேக் அவர்கள் என்னை விரைவாக அடக்கம் செய்யுங்கள் எனக்கு வெட்கமாக இருக்கின்றது .ஏனெனில் நபியவர்கள் எனது வரவை எதிர்பார்த்த வண்ணம் நின்று கொண்டிருக்கின்றார்கள் ' என்று கூறியதாகக் சொன்னார். (தீஸ் மஜாலிஸ்134 ,மொலானா இஸ்யாஸ் ஓர் தீனீ தஃவத் )

அப்படியானால் நபியவர்கள் இன்னும் மரணிக்க வில்லையோ ?? நாம் நபியவர்கள் மரணித்து விட்டதாகவல்லவா நம்பியிருக்கின்றோம். எது சரி ?

இது பற்றி ஸவூதி அரேபிய உலமாக்கள் பத்வாக் குழுவிடம் கேட்கப்பட்ட போது இப்படியான நிகழ்வுகள் நிகந்ததாககக் கூறுவதெல்லாம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாற்றமானதாகும். நபியவர்கள் நேரடியாகவோ அல்லது அவர்களது உருவம் மாத்திரமோ மரணிக்கவிருப்பவரிடம் வருவதென்பது அல்குர்ஆன் ஹதீஸூக்கு முரணான விடயமாகும். அவர்களை மறுமையில் அனைவரும் எழுப்பப்பட்டதன் பின் சந்திக்கும் வரைக்கும் யாராலும் காண முடியாது என்றுபல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பத்வா மார்க்கத் தீர்ப்பு அளித்துள்ளனர். . பார்க்க :( பதாவா இஸ்லாமியா 1- 134 )

2- நபிமார்களைப் போல் பாசாங்கு பண்ணும் மௌலானாக்கள் .
மௌலானா நானூத்வி அவர்கள் கூறுகின்றார்கள். 'நான் சில வேளைகளில் தஸ்பீஹ் மணியைத் தூக்கும் போது அதன் ஒவ்வொரு மணியும் பாறாங்கற்களைப் போன்று சுமையாக இருப்பதை உணர்வேன். இதயத்திலும் நாவிலும் ஒரு வித அடைப்பு ஏற்படுவது போன்றும் உணர்ந்தேன். இது பற்றி மௌலானா ஹாஜி மக்கி அவர்களிடம் வினவிய போது 'இந்தச் சுமை இருக்கின்றதே... இதுதான் அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெறும் போது நபிமார்களுக்கும் ஏற்பட்டது. உமக்கும் அல்லாஹ் நபிமார்களுடைய பொறுப்பைத் தரப்போகின்றான் என்றார்கள். இதே போன்ற நிகழ்வு இல்யாஸ் மொலானா அவர்களுக்கும் ஏற்பட்டது. அது பற்றி றஸீத் அஹ்மத் கான்கோயியிடம் கேட்ட போது அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு நபியவர்களுக்கும் இதே நிலைதான் வஹி வரும் போது ஏற்பட்டது என்றார்கள். ( ஸவானிஹ் காஸிமி 1- 134)

அல்லாஹ்வின் இறை தியானத்தில் லயித்துப் போன ஒருவர் நபியவர்களைச் சந்தித்த போது அவர்கள் இவ்வாறு கூறினார்களாம் ஜக்கரிய்யா மௌலானா அவர்களது இதயத்திலிருந்து உதிப்பாகக் கூடிய அனைத்துமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பவையே என்றார்களாம். (மஜாலிஸ் திக்ர். ப :12 )

அன்புமிகு சகோதரர்களே.. சற்று ஆழமாகச் சிந்தியுங்கள். அன்று சூபியாக்கள் தம்மை மகான்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு தம் மீது முரீதுகளுக்குப் பிடிப்பும் நம்பகத்தன்மையும் ஒருவகை அச்ச உணர்வும் இருக்க வேண்டுமென்பதற்காக இப்படித்தான் தம்மைப் பற்றி திகிலூட்டக்கூடிய சாகசக் கதைகளையும் , பஞ்ச தந்திரப் புதிர்களையும் முரீதுகளுக்கு அள்ளி வீசி அவர்களை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் வீழ்த்தி தாம் சொல்பவை அனைத்துமே வேத வாக்கு என்று நம்பும் அளவுக்குப் பண்ணி விட்டார்கள். அதற்கும் இந்த தப்லீக் பெரியார்களின் பேச்சுக்களுக்கும் எவ்வித வித்தியாசமும் எனக்குத் தெரிவில்லை. இவற்றைச் சொல்வதன் நோக்கம் அவர்கள் மீது பக்தர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர- அவர்களது பேச்சை வஹியென நம்பி மாற்றுப் பேச்சு பேசக் கூடாது என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும். இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர். குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைப்பவர் ; தன்னைப்பற்றிய சுய புகழாரம் பாடுவதன் - தம் குரு நாதர்கள் பற்றித் தேவாரம் பாடுவதக் ரகசியம் என்ன?. புகழ் விரும்பினால் கூட புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால் எதற்காக நபிமார்களின் சம்பவங்கள் போல் தமக்கும் நிகழ்ந்ததாகக் கூறி நபி போன்று பாசாங்கு பண்ண வேண்டும்??

சற்று சிந்தியுங்கள் நபியவர்களின் வாயிலிருந்து வருபவைகளைப் பொறுத்த வரையிலும் கூட மார்க்க விடயங்கள் மாத்திரமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருபவை. இது தவிர ஏனைய நேரங்களில் அவர்களுக்கே பல தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க நபியவர்களே நேரில் வந்து அந்தப் பெரியாரிடம் ஜக்கரிய்யா மொலானாவின் இதயத்தில் உதிப்பாகும் அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும் என் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?. ஒன்று அப்பெரியார் நபியவர்களின் பெயரில் பச்சைப் பொய்யைக் கூறியிருக்க வேண்டும் அல்லது அவரிடம் ஷைத்தான் ஆஜராகி மேற்படி விடயத்தைக் கூறியிருக்க வேண்டும் அப்படியல்ல அது உண்மைதான் என்று வாதிடும் சகோதரர்களைப் பொறுத்த வரை ஜக்கரிய்யா மௌலானா நபியவர்களை விட உயர்ந்தவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர் என்றே அர்த்தம். ஏனெனில் தான் சொல்பவை செய்பவை இதயத்தில் உதிப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்தலிருந்து வருபவை என்பது நபியவர்களுக்கே கொடுக்கப்படாத ஒரு அந்தஸ்த்து அல்லவா ?
மௌலானா தகிய்யுத்தீன் அலி நத்வி அவர்கள் கூறுகையில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் தூங்குவார்கள் ஆனால் நபியவர்களைப் போன்று அவர்களின் கண்கள்தான் தூங்கும் இதயம் தூங்காது. (தீஸ் மஜாலிஸ் ப: 29 )

பேசாமல் ஜக்கரிய்யா மௌலானாவும் ஒரு நபிதான் என்று இவர்கள் சொல்லி ஒரு போடு போட்டாலும் ஆச்சரியப்படுவத ற்கில்லை .

3- நபியவர்கள் மரணிக்க வில்லையா ??

அல்குர்ஆன் ஹதீஸ் போதனைப்படி நபியவர்கள் இவ்வுலகை விட்டும் மரணித்து விட்டார்கள். மரணித்தவர்கள் மீண்டும் மஹ்ஷரில் எழுப்பப்படும் வரை கப்ரிலே பர்ஸக் உடைய வாழ் வில் இருக்கின்றனர். இவர்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ, செய்யவோ, பதிலளிக்கவோ முடியாது. இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அல்லாஹ்தான் அறிவான். அனால் இது உலக வாழ்க்கைக்கு முற்றிலும் வேறுபட்டது. நபியவர்கள் மீது நாம் ஸலவாத் சொல்லும் போது அவர்களது உயிரை அல்லாஹ் மீட்டிக் கொடுத்தே பதிலளிக்க வைக்கின்றான் என்று நபியவர்களே கூறியிருக்கின்றார்கள். எனவே அல்லாஹ் உயிரை மீட்டி மக்கள் ஸலாம் சொன்ன விடயத்தை அறிவிக்காத வரை நபியவர்களுக்கே அது பற்றி எதுவும் தெரியாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது .
ஆனால் தப்லீக் பெரியார்களின் கருத்து இந்த விடயத்தில் எப்படியிருக்கின்றது என்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ???

ஜக்கரிய்யா மொலானா அவர்கள் சொல்வது ....
'முல்லா ஜாமி அவர்கள் ஹஜ்ஜூக்குச் சென்றார்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு நபியவர்களைப் புகழ்ந்து பாடலொன்றை இயற்றிக்கொண்டு மதீனா செல்லத் தயாரானார்கள் . அப்போது மக்கா அமீரின் கனவில் நபியவர்கள் தோன்றி அவரை மதீனாவுக்குச் செல்ல விடாமல் தடுக்குமாறு சொன்னார்கள் . இதையறிந்த அப்பெரியார் யாருக்கும் தெரியாமல் ஒழித்து மதீனா செல்லத் தயாரானார் . மீண்டும் நபியவர்கள் அமீரின் கனவில் தோன்றி இவரைத் தடுக்குமாறு கூற அமீரானவர் காவலர்களை அனுப்பி அவரைப் பிடித்து சிறையில் அடைத்து நையப் புடைக்க ஆரம்பித்தார்கள் . பின் நபியவர்கள் மறுமுறையும் கனவில் தோன்றி ஏன் அவரைத் துன்புறுத்துகின்றீர்கள் . அவர் எவ்வித குற்றமும் செய்யவில்லை மாறாக அவர் ஒரு பாடலைப் புனைந்து வைத்திருக்கின்றார் . அதை அவர் என் முன்னிலையில் பாடினால் முஸாபஹாச் செய்வதற்காக நான் என் கையை வெளியே கொண்டு வர வேண்டியிருக்கும் . அதனால் மக்கள் மத்தியில் பித்னா ஏற்படும் என்று அஞ்சுகின்றேன் என நபியவர்கள் கூறினார்கள் .  ( ஹஜ்ஜின் சிறப்பு 803 )

இப்றாஹீம் பின் ஸைபான் என்பவர் நபியவர்களின் ஜியாரத்துக்குச் சென்று ஸலாம் கூறிய போது வஅலைக்கஸ்ஸலாம் என அசரீரி கேட்டது . (ஹஜ்ஜின் சிறப்பு 153 )

இது போன்ற சம்பவங்கள் இன்னும் பலருக்கு ஏற்பட்ட விபரங்களை ஜக்கரிய்யா மௌலானா எடுத்துக்கூறி நபியவர்கள் கப்ரில் எம்மைப் போன்று உயிருடன் இருக்கின்றார்கள் நாம் பேசுவதை அவர்கள் கேட்கின்றார்கள் . அதற்கு பதிலும் அளிக்கின்றார்கள் எனும் நபி வழிக்கு மாற்றமான கருத்தை நிலை நாட்டுகின்றார்கள் . தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களுடைய வாழ்க்கை முறையும் என்று இவர்கள் போடும் கோஷத்திற்கு இதுதான் அர்த்தமோ ? இப்படி தனது கப்ரில் வந்து மண்டியிட்டு பாடல் இசைக்குமாறுதான் நபியவர்கள் வழிகாட்டிச் சென்றார்களோ ?

மற்றுமொரு அதிசய நிகழ்ச்சி ...
றிபாய் நாயகம் அவர்கள் நபியவர்களை ஜியாரத் செய்ய வந்த வேளை கப்ரின் முன்னால் நின்று கொண்டு ஒரு பாடலைப் பாடினார்கள் . அதன் கருத்தாவது ...

நான் உம்மை விட்டும் தூரத்தில் இருந்த போது உம்மை சந்திக்க என் உயிரைத் தூதனுப்பினேன் .பூமி எனது கோரிக்கையை ஏற்று என்சார்பாக என்னுயிரை உம்மிடம் அழைத்து வந்தது . இப்போது நானே உங்கள் சமூகத்துக்கு வந்துள்ளேன் . என்னுதடுகள் (முத்தமிட்டு) பேறு பெறுவதற்காக உம் கரத்தை நீட்டுங்கள் என்று பாடினார்கள் . உடனே நபியவர்களின் கை கப்ரிலிருந்து வெளிப்பட்டது . அதனை றிபாய் நாயகமவர்கள் முத்தமிட்டார்கள் இதனை அவ்வருடம் ஹஜ்ஜூச் செய்த தொண்ணூறாயிரம் பேர் தமது கண்களால் கண்டார்கள் அவர்களில் அப்துல் காதிர் ஜீலானியும் ஒருவராவார்கள் . (ஸதகாவின் சிறப்பு ப : 941 )
 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends