بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

இரண்டாம் நம்பர் தொழுகை .


இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது தொழுகையாகும் . தொழுகையை விட்டவன் முஸ்லிமாக இருக்க முடியாது . தொழுகையின் முக்கியத்துவம் சிறப்பு அதனை விடுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியெல்லாம் அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் அதிக இடங்களில் விபரித்துக் கூறப்பட்டுள்ளன .

தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் தஃலீம் தொகுப்பான அமல்களின் சிறப்பில் தொழுகைக்காக ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது . அதிலே தொழுகையின் அவசியம், அதன் சிறப்புகள், தொழுகையை விட்டவர்களுக்குரிய தண்டணைகள் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதையெல்லாம் எவரும் குறை கூற வேண்டியதில்லை.

தஃலீம் தொகுப்பு புத்தகத்தின் வடிவமைப்பே வித்தியாசமானது திட்டமிட்டு இதனை ஜக்கரிய்யா மௌலானா மிக்க வியூகம் வகுத்து தமது மார்க்க விரோதக் கருத்துக்கள் பாரரர்களுக்கு இலகுவில் புரிந்து விடாதபடி திட்டமிட்டு வகுத்திருக்கின்றார்கள். அதைத் தமிழில் தந்த நிஜாமுத்தீன் அதைவிடமேலே சென்று மௌலானா கூறிய மார்க்க விரோதக் கருத்துக்களை இலகுவில் புரியாத வகையில் இலக்கிய நயம்பட இலைமறை காயாக ஆங்காங்கே புகுத்தியிருக்கின்றார்கள் . ஆரம்பத்தில் அல்குர்ஆன் வசனங்களை அரபியில் போட்டு அதன் அர்த்தத்தையும் தருவார்கள் இதன் பின் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் சிலதைக் கூறி விடயத்துக்கு வலுவூட்டுவார்கள். இதனால் வாககர்கள் கவரப்பட்டு ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க முற்படுவார்கள் . அதன் பின் சில பலவீனமான ஹதீஸ்களின் விளக்கங்கங்கள் வரும். பின்னர் புனையப்பட்ட முகவரியில்லாத சில விடயங்கள்

'ஒரு ஹதீஸில் வருவதாவது, ஒரு அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது ' எனும் பெயரில் இடம் பெறும் . அதன்பின்னர் பெரியார்களின் வரலாறு எனும் பெயரில் பல்வேறு விதமான போலிக்கதைகளும் நடக்காத கற்பனைச் சம்பவங்களும் சாகசச் செயல்களாகச் சித்தரிக்கப்பட்டு நவரசக் கதைகளுக்கு உரமூட்டுவது போல் அசந்து போன மக்களுக்கு உற்சாகப் பானமாக ஊட்டப்படும். ஏமாந்து பழகிப்போன எம் சமூதாயம் அவை அனைத்துமே இஸ்லாம் தான்என்று எண்ணித் தொலைத்து விடும் இது தான் தஃலீமைப் பற்றிய சுருக்கம் .


விரிவாகக் கூறுவதாயின் ...
தப்லீக் சகோதரர்கள் மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது . ஏனெனில் எனக்கே தப்லீக்கில் பலதடவைகள் நீண்ட வக்துக்களில் வெளிக்கிளம்பிச்சென்ற அனுபவமுண்டு . இவர்களது முயற்சியால் பலர் தொழுகையாளர்களாக ஆனதையும் பல பாழடைந்த பள்ளிகள் எழுச்சி பெற்றதையும் கூட மறுக்க முடியாது . அவையெல்லாம் இதனால் கிடைக்கும் நன்மைகள். அதே போல் இதிலுள்ள பாதகங்களையும் கவனிக்கத்தானே வேண்டும். ஒரு மனிதன் ஐவேளை தொழக் கூடியவனாக இருக்கின்றான் என்பதற்காக அவன் செய்கின்ற ஏனைய தவறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடமுடியுமா?முடியாதுதானே! அப்படியானால் இப்போது இங்கு தொழுகை விடயத்தில் தப்லீக் மக்களிடத்திலுள்ள தவறுகளையும் சொல்லத்தானே வேண்டும் .அது தானே நீதி ?

எனவே தப்லீக் சகோதரர்களாயினும் ஏனைய பொது சகோதரர்களாயினும் சரி பின்வரும் குற்றச் சாட்டுக்களைச் செவிமடுங்கள் . அவதானியுங்கள் பின் அது சரிதானா? என சிந்தியுங்கள் . தீர்ப்புக் கூறுவது உங்கள் கைகளில் . அல்லாஹ்வுக்குப் பயந்து நாளை மறுமையில் அவன் எம்மை விசாரிப்பான் என்பதை உள்மனதில் நிறுத்தி வாசியுங்கள் . சரியாயின் அதை ஏற்றுக்கொண்டு உங்கள் முடிவை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை . பிடிவாதத்தை விடுங்கள் அதனால் மறுமையில் எமக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதுமில்லை .அல்லாஹ் நாளை மறுமையில் எம்மை விசாரிக்கும் போது குர்ஆன் சொன்ன படி வாழ்ந்தாயா ? நபிகளின் வழிகாட்டல்களின் படி வாழ்ந்தாயா ? என்றே விசாரிப்பான் . நீ அந்த ஜமாஅத்தை ஆதரித்தாயா ? இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்டாயா ? என்றெல்லாம் கேட்கப் போவதில்லை . ஒரு அமைப்பை ஒருவர் ஆதரிப்பதும் புறக்கணிப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது . ஆனால் நபி வழியை ஒவ்வொருவரும் ஆதரித்தே ஆகவேண்டும் . அதன்படியே வாழ்ந்தாக வேண்டும் .இல்லாவிட்டால் செல்லுமிடம் நரகந்தான் . இப்போது விடயத்துக்கு வருவோம்.

முறைப்பாடு : . 1 (தப்லீக் பெரியார்களும் மத்ஹபு வெறியும்...?)

முஸ்லிம்களில் மத்தியில் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் அனைத்து அறிஞர்களுமே நபிவழிக்கு மாற்றமாக மத்ஹபுச் சட்டங்கள் அமையும்போது நபி வழிப்படியே நடக்க வேண்டுமென்ற முடி விலுள்ளனர் . அதுவே சரியானதுமாகும் . நான்பு மத்ஹபுகள் என்பது அந்த நான்கு இமாம்களும் திட்டமிட்டு உருவாக்கி விட்டு இதைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் செய்ததன்று . மாறாக அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் கருத்துக்கள் போன்றன காலப்போக்கில் மக்களால் பின்பற்றப்பட்டு வந்ததால் ஏதேச்சையாக உருவானதே மத்ஹபுகளாகும் . அப்போதும் கூட அந்த இமாம்கள் தாம் கூறிய கருத்துக்களும் தீர்ப்புக்களும் நபிவழிக்கு மாற்றமாக இருப்பின் தமது கருத்தைத் தூக்கியெறிந்து விட்டு நபிவழிப்படி அமல் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் .

இமாம் ஷjபி அவர்கள் கூறுகின்றார்கள் ..
எம்மில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸூக்கு மாற்றமாகச் சொன்னால் அதை யாருமே எடுத்துச் செயற்படுத்தக் கூடாது என்பதே எனது கருத்தாகும் . எந்த ஒரு அறிஞருக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸூக்கு மாற்றமாகப் பேசும் உரிமை கிடையாது. . ( நூல் : றிஸாலா 219ம் பக்கம் )

எங்களுடைய பேச்சுக்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு நாங்கள் எங்கிருந்து (என்னஆதாரத்தின் அடிப்படையில்) சொன்னோம் என அறியாமல் தீர்ப்பு வழங்குவது யாருக்கும் கூடாது என இமாம் அபூஹனீபா, மாலிக் ஷாபிஃ, அஹ்மத் ஆகிய நால்வருமே கூறியுள்ளார்கள் . (நூல் : அல் இன்திகாஃ 145 பக்கம் ).

நான் ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தால் அதனை அல்லாஹ்வின் வேதத்தோடும் நபியவர்களின் ஸூன்னத்தோடும் உரசிப் பாருங்கள் .அவ்விரண்டுக்கும் மாற்றமாக என் சொல் இருந்தால் என் சொல்லைச் சுவற்றில் தூக்கி வீசி விடுங்கள் .என்று நான்கு இமாம்களும் கூறியுள்ளார்கள் . ( நவவியின் அல் மஜ்மூஃ 1-63)

இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் மார்க்கத்தீர்ப்பு வழங்கிவிட்டு இவ்வாறு கூறுவார்களாம் ..இதுதான் என்னுடைய அறிவுக்கு எட்டிய விளக்கம் .இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைத்தால் அவர் அதைப் பின்பற்றுவதுதான் சரியானது .
( தன்பீஹூல் காபிலீன் முன்னுரை )

அது மாத்திரமல்ல இவர்களுக்குப் பின்வந்த எவ்வளவோ இமாம்கள் தான் ஒரு குறிப்பிட்ட மத்ஹபுடைய இமாம்களாக கணிக்கப்பட்டாலும் கூட எத்தனையோ விடயங்களில் மத்ஹபுவைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என வலியுறுத்தியுள்ளதைப் பார்க்கலாம் .

ஹனபி மத்ஹபின் மேதையாகிய முல்லா அலிகாரி அவர்கள் சொல்கின்றார்கள் ..
'இந்த சமூதாயத்தில் யாரும் ஹனபியாகவோ, மாலிக்காகவோ ஷாபியாகவோ, ஹன்பலியாகவோ இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை .நான்கு இமாம்களும் அறிஞர்கள்தான் எனவே யார் ஒரு அறிஞரைப் பின்தொடர்கின்றாரோ அவர் நிம்மதியாக இறைவனைச் சந்திப்பார் என்று சொல்லப்படுகின்றது . ஆனால் பருவ வயதையடைந்த ஒவ்வொருவரும் நபிமார்களின் தலைவரான முஹம்மது நபி அவர்களைப் பின்பற்றுமாறே கட்டளையிடப்பட்டுள்ளனர் . அவர்கள் தான் பின்பற்றப்படவேண்டிய இமாம் ஆவார்கள் .

ஹனபி மத்ஹபு மேதையான அப்துல் ஹக் திஹ்லவி அவர்கள் கூறும் போது ' பின்பற்றப்பட வேண்டிய ஒரே இமாம் முஹம்மது நபியவர்கள் மட்டுமே. அவர்கள் அல்லாதவர்களைப் பின்பற்றுவது அறிவுக்குப் பொருந்தாது . இதுதான் ஆரம்பக் கால நல்லோர்கள் கடைப்பிடித்த நல்ல முறையாகும் . அல்லாஹ் நம்மையும் அவர்களுடன் சேர்ப்பானாக, ( ஷரஹ-ஸ்ஸிராத்தல் முஸ்தகீம் .)

இது இப்படியிருக்க தப்லீக் ஜமாஅத்தின் பெரியார்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வாழ்க்கை வழிமுறையுமாகும் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் . ஆனால் ஹனபி மத்ஹபில் உள்ள சட்டங்களை அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதில் பைத்தியகாரத்தனமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவ்வாறு செய்வது கடமை என்று பகிரங்கமாகவே பிரகடனப் படுத்துகின்றவர்கள் இவர்கள் . நபி வழி எக்கேடு கெட்டாவது போகட்டும் . ஹனபி மத்ஹபே எமது வழி எனும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் இருப்பதை நன்றாகவே நாம் அவதானிக்கலாம் . ஏனைய மத்ஹபுவைச் சார்ந்த தப்லீக் தொண்டர்கள் ஹனபி மத்ஹபைத்தான் பின்பற்ற வேண்டுமென்று இவர்கள் வெளிப்படையாக வலியுத்துவதில்லை .

இருந்தாலும் இவர்களிடம் பாடம் பெற்று மூளைச் சலவைக்கு உற்படுத்தப்பட்ட கார்க்கூன்களும் காலப்போக்கில் இவர்களைப் பின்பற்றி அவர்கள் செய்வதைப் போன்றே செய்வதையும், இன்னும் சிலர் இதே பிடிவாதத்தை தமது மத்ஹபான ஷாபி மத்ஹபு எனும் பேரில் ஊர் வழக்கில் உள்ள மௌட்டீக அனுஷட்டானங்களை பக்திப் பரவசத்துடன் செய்து வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது . சுருக்கமாசச் சொல்வதாயின் இன்றைய டில்லி, ட்ரைவிங் மர்க்கஸின் தப்லீக் பெரியார்கள் ஹனபி மத்ஹபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர் . இவர்கள் நேர்வழி காட்டுவார்கள் என்று இவர்களை நம்பி தப்லீக்கில் தம்மை இணைத்துக் கொண்ட அப்பாவி கார்க்கூன்கள் நபி வழியைப் பின்பற்றுகின்றோம் என்று எண்ணிக்கொண்டு டில்லி மர்க்கஸ் பெரியார்களையும், ட்ரைவிங் மர்க்கஸ் பெரியார்களையும் பின் பற்றுகின்றார்கள் . இருவருமே நபிவழியைத் தூக்கி வீசி விட்டார்கள் .

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ;;;
'நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் . ஆதாரம் (புகாரி 595 )

ஆனால் தப்லீக் பெரியார்கள் இன்று வரைக்கும் ஹனபி மத்ஹபின் மீது கொண்டுள்ள ஒருவகை வெறியால் தொழுகை விடயத்தில் எந்தனையோ மஸாயில்களில் - தம் அம்மத்ஹபு நபிவழிக்கு மாற்றமாக இருந்தும் ஹதீஸைத் தூக்கியெறிந்து விட்டு மத்ஹபின் படியல்லவோ தொழுகின்றனர் ...உதாரணத்துக்கு சில உண்மைகள் ...

1- தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆ நபியவர்கள் சொல்லித்தராத பித்அத்தாகும் . ஹனபி தப்லீக் பெரியார்கள் இதைச் செய்வதில்லை . நபிவழிக்கு மாறானது என்பதற்காக அல்ல. தமது மத்ஹபில் இல்லை என்பதனால்தான் . நபி வழியில் இல்லை என்பதற்காகத்தான் இவர்கள் செய்யாதிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் ஷாபி மத்ஹபு தப்லீக் வாதிகள் கூட்டு துஆ ஓதும் போது இவர்களும் சேர்ந்து ஜால்ரா போடுவார்களா ? ஆனால் போடுகின்றார்களே .. . ஆக மொத்தத்தில் நபிவழிப்படி நடப்பதில் இருசாராருக்கும் பிடிப்பில்லை . ஒரு சில உள்ளுர் தப்லீக் மர்க்கஸ்களின் பொறுப்புதாரிகள் டில்லி மர்கஸில் நடப்பது போல்தான் இங்கும் நடை பெற வேண்டும் என்பதற்காக கூட்டுதுஆவை விடவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களும் உண்டு. எனவே யார் எந்த மத்ஹபை, எந்த வழிகெட்ட இயக்கத்தைச் சேர்ந்தோராக இருப்பினும் தப்லீக் ஜமாஅத் அவர்களை ஏற்றுக் கொள்ளும் . அவர்களிடம் இருக்கும் எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாது .

எனது ஊரில் உள்ள தப்லீக் மர்க்கஸில் ஜூமைராத் பயான் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இஷாத் தொழுகைக்கு ஏனைய பள்ளிகளில் அதான் சொல்லப்படும் போது மர்க்கஸிலும் அதான் சொல்வதா அல்லது பயானைத் தொடரலாமா ? எனும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது . இது பற்றி நபிவழியில் ஸூன்னாவில் தீர்வு இருந்தும் கூட, 100க்கும் மேற்பட்ட உலமாக்கள் ஊரில் இருந்தும் கூட, உலமாக்கள் ஒன்றிமே அவ்வூரில் இருந்தும் கூட ,பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இருந்தும் கூட இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு இவ்விடயத்தை கொழும்பு பெரிய மர்க்கஸின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து டில்லி மர்க்கஸூக்கு அனுப்பப்பட்டே முடிவு பெறப்பட்டது . ஏற்கனவே பல உலமாக்கள் சொன்ன முடிவுதான் அது. இது எதைக் காட்டுகின்றது ? இவர்களுக்கு டில்லி தப்லீக் பெரியார்கள் மீது ஏற்பட்ட குருபக்தியும், தனி; மனித வழிபாடும் நபி வழியையும் மறக்கச் செய்து - தான் சார்ந்திருந்த மத்ஹபையும் மறக்கச் செய்து குருவழி நடக்கும்; குருடர்களாக்கி விட்டதே ....

2- நபிவழிதான் நம்வழியென ஒன்றுமறியாத அப்பாவி தப்லீக் தொண்டர்கள் கூறிக்கொண்டு திரிகின்றார்கள் . ஆனால் இவர்களின் தலைவரான ஜக்கரிய்யா மௌலானா தப்லீக் அமைப்பு வஹாபிஸ அமைப்பு என்றோருக்கு மறுப்பாக என்னகூறுகின்றார் என்று பாருங்கள்...

நாங்கள் வஹ்ஹாபிகளல்ல . 'வஹ்ஹாபிகள் எனப்படுவோர் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டாலும் அந்த மத்ஹபில் ஏதாவது ஒன்றை ஹதீஸூக்கு மாற்றமென அவர்கள் கருதினால் உடனே மத்ஹபை விட்டு விடுவார்கள் . ஆனால் தப்லீக் பெரியார்களான தேவ்பந்த் ஆலிம்களோஇமாம் அபூஹனீபா அவர்களைப் பின்பற்றுகின்றவர்கள் ஹனபி மத்ஹபுப்படி நடப்பவர்கள் . அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று கூறுகின்றவர்கள். (தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுக்களும் பதில்களும் ப:176)

நபிவழியே தீன் என்ற இவர்களின் கூற்று உண்மையாயின் மேற்படி ஜக்கரியாமொலானாவின் வாக்கு மூலத்தின்கதிஎன்ன ??? சிந்திப்போமாக .

3- தொழுகைக்காக அதான் சொல்லும் போது ஒவ்வொரு வாசகங்களையும் இரு முறை சொல்லும்படியும் இகாமத்தின் போது ஒவ்வொரு தடவை சொல்லும் படியும் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் . ஆதாரம் : ( புகாரி 167)

இதற்கு மாற்றமாக தப்லீக் மர்க்கஸ்களென்ன ? ஏனைய ஹனபி தப்லீக் கார்க்கூன்களின் மஸ்ஜித்களிலும் ஹனபி மத்ஹபின் படி இருதடவைகள் அதானைப் போன்றே இகாமத்தும் சொல்லப் படுகின்றது .ஷாபி மத்ஹபு பள்ளிகளுக்கு இவர்கள் வந்தால் - அங்கு தமது மத்ஹபின் படி அங்கு நடக்க முற்பட்டால் - மத்ஹபு வெறியை வெளிப்படுத்தினால் சர்ச்சை ஏற்பட்டு ஷாபியிகள் தப்லீக் வக்தில் கிளம்புவது தடைப்படலாம் என்ற அச்சத்தால் பெரியார்களே அந்தந்த இடங்களில் எப்படித் தொழுகின்றார்களோ அப்படியே தொழுது கொள்ளுங்கள் என்று கார்க்கூன்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.
 
எனவே இவர்களைப் பிடித்துள்ள மத்ஹபு வெறி ஸூன்னாவைக் கண்டெல்லாம் நீங்காது . மாறாக தம் இயக்கத்தின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் எனும் போது அவரவர் மத்ஹப்படி செய்யலாம் என சலுகையளிக்கப்படும் . எனவே தம் மத்ஹபு மீது இவர்களுக்குள்ள நம்பிக்கை கூட நபியின் ஸூன்னாவின் மீது கிடையாது என்பதே உண்மை,

4-அதே போன்று தொழுகையில் பாத்திஹா ஸூராவுக்குப்பின் சத்தமிட்டு ஆமீன் கூறுவது நபி வழியாகும் .
உங்களுக்குத் தொழுகை நடத்தும் இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் .ஏனெனில் எவரின் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . (புகாரி முஸ்லிம் 738 )

ஹனபி மதஹபுக்காரர்கள் இவ்வாறு சத்தமிட்டு ஆமீன் சொல்வதில்லை . இதே மத்ஹபின் அடிப்படையினையே தப்லீக் பெரியார்களும் தமது டில்லி ட்ரைவிங் மர்கஸ்களில் அமுல்ப் படுத்துகின்றார்கள் .

5-இவ்வாறே மஃரிபுடைய அதானுக்குப்பின்னர் இரண்டு ரக்அத் ஸூன்னத்து விரும்பியவர்கள் தொழுது கொள்ள நபியவர்கள் அனுமதித்துள்ளனர் . ஹனபி மத்ஹபில் இதுகிடையாது ஆகவே தப்லீக் பெரியார்களிடமும் கிடையாது . இவ்வாறே றுகூஉக் குப்பின் கைகளை உயர்த்துவது நபிவழியாகும் ஹனபிகளிடம் அது இல்லாததால் தப்லீக் பெரியார்களிடமும் இல்லை .

இவையெல்லாம் உதாரணத்துக்குத்தான். இது போன்ற எத்தனையோ ஸூன்னாவுக்கு எதிரான மத்ஹபு சட்டங்களுக்கு தப்லீக் பெரியார்கள் கட்டுப்பட்டு ஸூன்னாவை விட மத்ஹபே பெரிதென வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .அவ்வாறு கற்றும் கொடுக் கின்றனர்.

இத்தனையும் செய்து கொண்டு அசலான நபிகளின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதில் தான் துன்யா ஆகிரா இரண்டின் வெற்றியுமிருக்கின்றது என்று சங்கூதவும் செய்கின்றனர் .




 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends